Wednesday, April 14, 2010

தமிழ்வெளி மூன்றாண்டு நிறைவு

தமிழ்வெளி தன் மூன்றாம் ஆண்டை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது...

தமிழ்வெளி தன் மூன்றாம் ஆண்டை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது... இந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்வெளி ஒரு குறிப்பிடத்தகுந்த இடத்தை தமிழ் இணைய தளங்களில் பெற்றிருப்பதற்க்கு தமிழ்வெளி வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் தமிழ்வெளி நன்றியை தெரிவிக்கின்றது.

முதல் இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எந்த முயற்ச்சியும் சோதனைகளும் எடுக்கப்படாமல் இருந்த தமிழ்வெளி சென்ற ஆண்டில் புதியதொரு முகப்பு பக்கத்துடனும் தமிழ்வெளி திரட்டி எஞ்சினின் திறன் மேம்படுத்தப்பட்டதுடன் தமிழ்வெளிக்காக பேராசிரியர் சுப.வீ, புதியதமிழகம் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, மதிமுக தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யா மற்றும் சிலரின் சிறப்பு பேட்டிகள் வெளியிடப்பட்டன.

தமிழ் இணையவெளியில் ஏன் தமிழக ஊடகவெளியிலேயே இதுவரை இல்லாத அளவிற்க்கு பெரிய அளவிலான பரிசுகளுடன் நடைபெற்ற மணற்கேணி-2009 கருத்தாய்வு போட்டியில் சிங்கை வலைப்பதிவர் குழுமத்துடன் இணைந்து தமிழ்வெளியும் பங்குபெற்றது தமிழ்வெளிக்கு ஒரு மகிழ்வான நிகழ்வு மட்டுமின்றி தமிழ்வெளி சமுதாயம் சார்ந்த முயற்ச்சிகளில் பங்களிப்பதில் எப்போதும் முனைப்பு காட்டுவதுடன் பெருமையும் அடைகிறது.

முதல் இரண்டாண்டுகளில் இல்லாத அளவிற்க்கு மூன்றாம் ஆண்டில் தமிழ்வெளிக்கான வாசகர்கள் மற்றும் பதிவர்கள் அதிகரித்ததும், குறிப்பாக இந்தியாவிற்க்கு வெளியே பெரிய அளவிலான வாசகர்களையும் வரவேற்ப்பையும் பெற்றது.

அதிகரித்த வாசகர்கள் மற்றும் பதிவர்கள் அளவிற்க்கு இணையாக தமிழ்வெளி வழங்கியால் சிறப்பாக செயல்பட இயலவில்லை, அதனால் சில தடங்கல்கள் அவ்வப்போது ஏற்ப்பட்டன, தற்போது திறன் மிகுந்த வழங்கிக்கு மாறியுள்ளதால் இம்மாதியான சிக்கல்கள் ஏற்படாது.

தமிழ்வெளி தொடர்பாகவும் பதிவுகள் இணைப்பதின் பிரச்சினைகள் தொடர்பாக அனுப்பப்பட்ட மின்மடல்களுக்கு உடனடியாக சிக்கல்களை சரி செய்வதோ உடனடியாக மின்னஞ்சல் அனுப்புவதோ சில நேரங்களில் இயலாமல் ஆகிவிட்டது, இதற்க்கு நிர்வாகம் தன் வருத்தத்தை தெரிவிக்கின்றது.

தமிழ்வெளி தற்போதும் கூட சில தனிநபர் முயற்சிகளாலும் அவர்களின் ஓய்வு நேர செயல்பாடுகள் நேர நெருக்கடி காரணமாக சில நேரங்களில் உடனுக்குடன் பதில் அனுப்பவதும் பிரச்சினைகளை சரி செய்வதுமான புரொஃபஷனலிசம் சற்று குறைவாக இருக்கும்போது வாசகர்கள் மற்றும் பதிவர்கள் மன்னித்து தயவு செய்து பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

இன்னும் சில வாரங்களில் "செய்திவெளி" மற்றும் "திரைவெளி" என்ற இரு புதிய பகுதிகள் வர உள்ளன, "தமிழ்வெளி உரையாடி"யும் மீண்டும் செயல்படத்துவங்கும்.


வாசகர்கள் மற்றும் பதிவர்கள் தங்களின் தொடர்ச்சியான ஆதரவை தமிழ்வெளிக்கு அளிக்குமாறூ வேண்டும் இதே வேலையில் தமிழ்வெளி வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் தமிழ்வெளி தம் நன்றியை உரித்தாக்குகின்றது.

2 comments:

சம்பத்குமார் said...

தங்களது பணி சிறக்க நல்வழ்த்துக்க்ள்

http://parentsactivitytamil.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

தமிழ்வெளி தன் மூன்றாம் ஆண்டை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது...//

வாழ்த்துகள்.